Tuesday, June 5, 2007
கவிதை: வாழ்க்கை!
அரவமற்ற நிசியில்
நடந்துகொண்டிருந்தேன் வியர்க..வியர்க
பணி முடிந்ததுமே கிளம்பி இருந்திருக்கலாம்
வெட்டி அரட்டையில்
வாதங்கள் சூடுபிடிக்க நேரத்தை விழுங்கிய கடிகாரத்தை கவனிக்கவில்லை
ஆட்சி
அதிகாரம்
வல்லரசு என்று எல்லாம் பேசிப் பேசி அலுத்தபோதுதான்
விடிந்துகொண்டிருக்கிறது என்று உணர்ந்துகொண்டு பிரிந்தோம்
அவ்வப்போது வெளிச்சத்திட்டுக்களை
உமிர்ந்து போனது மோட்டார் வாகனங்கள்
செருப்பில் சத்தம் கேட்டு
முகம் தூக்கிய நாய் அப்படியே படுத்துக்கொண்டது
துரத்தல்களுக்கு ஆளாகி களைத்துப் போயிருக்கலாம்.
சாலைகளின் ஓரத்தில் உறகத்திலிருந்தனர் பலர்
ஒளி குறைந்த அந்த மரத்தினடியில்
ஒருவன் ஒருத்தியை புணர்ந்துகொண்டிருந்தான்
எனக்குள் ஏனோ வல்லரசு விவாதம் நினைவுக்கு வந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
புரியாத கவிதை எழுதுபவர்களைத் தேடி யாரோ ஹிட்லிஸ்ட் செய்து கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன்.. அடுத்த ஹிட்டு நீங்க தானா?!
Post a Comment