Monday, June 4, 2007

கவிதை: காலத்தின் கோரப்பற்கள்



புட்டத்தை குறிகொண்டு வரும்
நாயென துரத்துகிறது காலம்
வழமை போலவே அதன் கோரப்பற்களுக்குள்
சிக்காமல் ஓடிக்கொண்டிருக்கிறேன்
ரத்தத்தின் சுவையறித்த அதன் நாக்கு
அச்சமேற்படுத்தினும்
உயிர் பயம் உள்ளுக்குள்
வேகத்தைக் கொடுக்கிறது
தூரம் அதிகமில்லையெனினும் வெற்றியின்
இலக்கை அடைந்துவிடும் வரையிலும்
துரத்தலும் ஓடுதலும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

4 comments:

Ken said...

நாக்குகள்
Very different and nice one

தமிழினியன் said...

வருகைக்கு நன்றி கென்!

பிழையை திருத்தி விட்டேன்.

லக்கிலுக் said...

//துரத்தலும் ஓடுதலும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.//

வாழ்க்கையின் யதார்த்தம் புரிகிறது!

நல்ல கவிதைக்கு நன்றி!!!

நந்தா said...

//துரத்தலும் ஓடுதலும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. //

//உயிர் பயம் உள்ளுக்குள்
வேகத்தைக் கொடுக்கிறது//

வாழ்க்கையைப் பற்றி மிக அழகாக சொல்லியுள்ளீர்கள்....

மிக நல்ல கவிதை. ஆழமான வரிகள்.